அகம் பாடி புறம் பாடி, நாடி நரம்பாடி, ஆக வேண்டும் உன்னில் நான் பாதி.

உன் ஏழு அடி கூந்தலில் என்னை பின்னலாய் முடித்து வைத்துஇருக்கும் இவளே,
உன் கை மருதாணி வண்ணத்தில் என்னை பூசியவளே,
வாடிய பூவுக்கும், தேடிய கண்களுக்கும் உம் புன்னகையால் உயிர்த்தந்தவளே! 

நான் எழுதும் செய்யுளும் நீ தான், உரைநடையும் நீ தான். 
இலக்கணமாய் வந்து,  இலக்கியமாய், மாயம் மாயமாய்,  
என்னை மார்போடு அணைத்து, ஓர் விளக்கை ஏற்றி,
அகம் பாடி புறம் பாடி, நாடி நரம்பாடி, ஆக வேண்டும் உன்னில் நான் பாதி.

No comments

Powered by Blogger.